இலங்கைசெய்திகள்

அச்சத்தில் வாழும் நாட்டு மக்கள்: பொலிஸ் மா அதிபர் தகவல்

Share

அச்சத்தில் வாழும் நாட்டு மக்கள்: பொலிஸ் மா அதிபர் தகவல்

நாட்டு மக்கள் பாதாள குழுசெயற்பாடுகள், போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் போதைப்பொருள் மோசடி மற்றும் பாதாள குழு செயற்பாடுமுற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

நாட்டுமக்கள் பாதாள குழுசெயற்பாடுகள், போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனால் ஒவ்வொரு நாளும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதேவேளை 11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தடைசெய்யப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுபாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...