இலங்கைசெய்திகள்

அச்சத்தில் வாழும் நாட்டு மக்கள்: பொலிஸ் மா அதிபர் தகவல்

Share

அச்சத்தில் வாழும் நாட்டு மக்கள்: பொலிஸ் மா அதிபர் தகவல்

நாட்டு மக்கள் பாதாள குழுசெயற்பாடுகள், போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் போதைப்பொருள் மோசடி மற்றும் பாதாள குழு செயற்பாடுமுற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

நாட்டுமக்கள் பாதாள குழுசெயற்பாடுகள், போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனால் ஒவ்வொரு நாளும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதேவேளை 11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தடைசெய்யப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுபாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...