செய்திகள்இலங்கை

சிறுவன் மீது முறிந்து விழுந்த மரம்!

Share
child
Share

உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவனொருவன் மீது, மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம், ஹொரவப்பொத்தான மோரவௌ பிரதேசத்திலுள்ள வயற் காணியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவனொருவன் மீது, மரம் முறிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹொரவப்பொத்தான துடுவட்ட மஹா வித்தியாலயத்தில், தரம் 9இல் கல்வி கற்றுவந்த சேனகே சம்பிக்க சுந்தர சேன என்பவரே இவ்வாறு மரணமடைந்தார்.

மேற்படி சிறுவன் தனது உறவினர் ஒருவருடன் குறித்த பகுதிக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உழவு இயந்திரத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, சிறுவனின் உறவினர், குறித்த மரத்துக்கு அருகில் உழவு இயந்திரத்தைத் தரித்து நிறுத்தியுள்ளார்.

இதன்போது மரம் முறிந்து சிறுவனின் தலையில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...