தூக்கத்தை தொலைத்த மாணவிகள்!! வெளியான காரணம்
இலங்கைசெய்திகள்

தூக்கத்தை தொலைத்த மாணவிகள்!! வெளியான காரணம்

Share

தூக்கத்தை தொலைத்த மாணவிகள்!! வெளியான காரணம்

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகளில் அறுபது வீதமானோர் பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தென் மாகாணத்திலுள்ள காலி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பாடசாலைகளிலும் பயிலும் மாணவிகளே பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தலையில் பேன்கள் அதிகம் காணப்படுவதால் அவர்களின் படிப்பு, தூக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ருஹுணு பல்கலைக்கழக இணை சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் மற்றும் காலி மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலக அதிகாரிகள் இணைந்து காலி நகரில் உள்ள மாணவிகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டதாக சமூக மருத்துவ நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார் .

கேள்வித்தாளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, 60% மாணவிகள் அதிகப்படியான தலை பேன்களால் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.

தலையில் உள்ள எண்ணெய் பசையை சுத்தம் செய்யாமை, தலையில் தங்கியிருக்கும் தூசி, தலையை சரியாக கழுவாதது போன்ற விடயங்களே தலையில் பேன்கள் வேகமாக பரவுவதற்கான காரணங்களாக சுட்டிக்காட்ட முடியும் என இந்த ஆய்வில் கலந்து கொண்ட தோல் நோய் வைத்தியர் டொக்டர் அச்சல லியனகே தெரிவித்தார்.

எனினும், தென் மாகாண சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் இந்த பிரச்சினையை அவசரமாக ஆராய்ந்து நிலைமையை சரிசெய்ய திட்டமிட்டுள்ளதாக சமூக நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...