maxresdefault 29 683c5da9b6598
இலங்கைசெய்திகள்

யூடியூபை அதிரவைக்கும் “விண்வெளி நாயகா..” பாடல்..! வெறித்தனமான அப்டேட்.!

Share

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த கனவு கூட்டணி ஒன்று 36 வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்திருக்கின்றது. அதுவேறு யாரும் இல்லை, உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் தான். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள ‘தக் லைஃப்’ (Thug Life) திரைப்படம் தற்போது இசை வெளியீடுகளுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்றுவருகின்றது.

ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம், மிகுந்த பட்ஜெட் மற்றும் பல மொழிகளில் ரிலீஸ் என இந்திய திரையுலகத்தில் பேசப்படும் மிக முக்கியமான படமாக மாறியுள்ளது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன் தவிர, சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதலாவது பாடலாக வெளியான ‘ஜிங்குச்சா’, இசை ரசிகர்கள் மத்தியில் மெகா ஹிட் ஆனது. ஏ.ஆர். ரகுமானின் நவீன இசையில் வெளியான இந்தப் பாடலை யூடியூபில் பல கோடி பார்வையாளர்கள் பார்த்தனர்.

‘தக் லைப்’ படத்தின் இரண்டாவது பாடலாக வெளிவந்த ‘சுகர் பேபி’ பாடல், ‘ஜிங்குச்சா’-வுடன் ஒப்பிடும் போது மென்மையான காதல் கலந்த பாடலாக அமைந்திருந்தது. இப்போது மூன்றாவது பாடலான ‘விண்வெளி நாயகா’ என்ற பாடல், இசையின் அழுத்தத்தாலும், குரல்களின் தனித்துவத்தாலும் ரசிகர்களை மறுபடியும் கவர்ந்துள்ளது. இப்பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே அதிகளவான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...