24 6656d31d82eca
இலங்கைசெய்திகள்

தேர்தலை ஒத்திவைக்கவில்லை: ஜனாதிபதி திட்டவட்டம்

Share

தேர்தலை ஒத்திவைக்கவில்லை: ஜனாதிபதி திட்டவட்டம்

ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை கொண்டு வரப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தானது சர்ச்சையை தோற்றுவித்திருந்த நிலையில், ஜனாதிபதி இதற்கு பதில் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த நடவடிக்கையை நிராகரித்துள்ள நிலையில், நேற்று மாலை அரசியல் வட்டாரங்களில் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), எதிர்க்கட்சி உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து இந்த அறிக்கையை மேலும் தெளிவுபடுத்துவதற்காக அழைப்புகளைப் பெறத் தொடங்கினார்.

இந்த அமைப்புக்களுக்கு பதில் வழங்கிய ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு நெருக்கமான ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர்கள், ஜனாதிபதியின் சார்பில் உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுத்த அறிக்கையை நிராகரிக்குமாறு அழைக்கப்பட்டதோடு, ரங்கே பண்டார ஏன் அவ்வாறான அறிக்கையை வெளியிட்டார் என்பது குறித்து ஐ.தே.க.வுக்குத் தெரியாது என்றும், அவ்வாறான எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறி அதனை கட்சி நிராகரித்ததிருந்தது.

இது ரங்கே பண்டாரவின் தனிப்பட்ட அறிக்கை அன்றி வேறில்லை. இது ஜனாதிபதியின் முடிவு அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

“ஒக்டோபர் மாதம் திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலும் நடத்தப்படும்.

தேசத்தைக் காப்பாற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரைத்ததாக ரங்கே பண்டார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் பிற நன்கொடையாளர்களுடன் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசாங்கம் உடன்பாடுகளை எட்டியுள்ளது என்றும், இந்த பயிற்சியை வெற்றியடைய ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டியது அவசியமானது.

இந்த அறிக்கை வெளியானவுடன், அனைத்து அரசியல் கட்சிகளுக்குள்ளும் குழப்பம் ஏற்பட்டிருந்தது, ரணில் தனது பொதுச் செயலாளர் மூலம் இந்த அறிக்கையை வெளியிட்டாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

பொதுமக்களின் எதிர்வினையை சோதிக்கவும், இந்த அறிக்கையை மேலும் தெளிவுபடுத்துவதற்காக அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை அணுகுவதற்கு தீவிரமாக முயன்றுள்ளனர்.

அனைத்து அரசியல் கட்சிகளும் இது நடைமுறைக்கு வந்தால் எதிர்ப்பதாக தெரிவித்த்திருந்நதன.” என கருணாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாலிதவின் கருத்தை ஆதரிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்தகைய நடவடிக்கைக்கு உடன்படுவதற்கும் மற்றும் ஜனாதிபதி அத்தகைய முடிவை நாட மாட்டார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியும் அதற்கு உடன்படாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய மக்கள் சக்தி அதை ஒருபோதும் ஆதரிக்காது. திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்தால் எந்த கட்சியும் அதற்கு வாக்களிக்காது” என்று அவர் கூறியுள்ளார்.

ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்படும் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் முறையான அறிவிப்பு ஜூலையில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...