6 37
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் திட்டமிடல்களை ஏற்றுக்கொண்ட அநுர தரப்பு: சாடும் மொட்டு கட்சி

Share

மகிந்தவின் திட்டமிடல்களை ஏற்றுக்கொண்ட அநுர தரப்பு: சாடும் மொட்டு கட்சி

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தரப்பு விமர்சித்த அனைத்தையும் சரி என்று குறிப்பிடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பு துறைமுக நகர செயற்திட்டத்துக்காக சீகிரியா குன்றையும் பெயர்த்தெடுக்க நேரிடும் என்று கடந்த காலங்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று துறைமுக நகர திட்டத்தை மேம்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இந்தியா மற்றும் சீனா எதிர்ப்பு கொள்கையை கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

கடந்த காலங்களில் கடுமையாக எதிர்த்த இந்தியா மற்றும் சீனா அபிவிருத்தி திட்டங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விஜயத்தில் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்த போது மக்கள் விடுதலை முன்னணி அதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தின் நிர்மாண பணிகளுக்கு சீகிரியா குன்றையும் பெயர்த்தெடுக்க நேரிடும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அப்போது குற்றஞ்சாட்டினார்.

தற்போது கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டத்தை மேம்படுத்துவதாக சீனாவுக்கு உத்தரவாதமளித்துள்ளார்.

கடந்த அரசாங்கங்கள் நாட்டுக்காக வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்த போது மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கத்தினர் திட்டத்தின் நன்மைகளை ஆராயாமல், பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளினால் பல வெளிநாட்டு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்காமல் போயின” என்றார்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...