11 18
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான செவ்வந்தி இல்லையா..!

Share

நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான செவ்வந்தியா என சந்தேகம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

யூடியூப் தனியார் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லும் போது வெளியான புகைப்படங்களில் அவரது முகம் நீள்வட்டமாக இருந்தது. எனினும், தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள செவ்வந்தியின் முகம் வட்டமாக உள்ளது.

செவ்வந்தியின் தோற்றத்திலும் நிறைய மாற்றங்கள் உள்ளன. பியூமி ஹன்சமாலியின் க்ரீமை பாவித்தால் கூட 8 மாதங்களில் அவ்வாறான தோற்றத்தை பெற வாய்ப்பில்லை.

அத்துடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒழுகல, செவ்வந்தியை நேபாளத்தில் வைத்து பார்த்தவுடன் அவரிடம் ‘நலமா?’ என வினவுகின்றார்.

செவ்வந்தியை போன்ற உருவ அமைப்பை உடைய மற்றொரு பெண்ணும் அங்கு இருக்கின்றார். இவ்வாறிருக்க, அவர் செவ்வந்தியை எவ்வாறு அடையாளம் கண்டுகொண்டார்?

வாகனம் செலுத்தும் ஒருவர் சாதாரண தவறொன்றை விட்டு பொலிஸாரிடம் சிக்கினால் அவர் பதற்றமடைவார். ஆனால், கொலை குற்றம் புரிந்த செவ்வந்தி, பொலிஸாரிடம் சிக்கும் போது அவரது முகத்தில் எந்தவொரு பதற்றமும் இல்லை. மாறாக, அவரது முகத்தில் சிரிப்பே இருந்தது.

சாதாரணமாக ஒரு குற்றவாளியை அழைத்து வரும் போது, முகத்தை மூடி அழைத்து வருவது வழக்கம். ஆனால், செவ்வந்தி தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு பகிரப்பட்டன.

எனினும், செவ்வந்தி தங்கியிருந்த இடத்தை பார்வையிட பொலிஸார் அவரை அழைத்து செல்லும் போது, முகத்தை மூடி அழைத்து செலகின்றனர். நாடு முழுவதும் அவரின் முகத்தை பார்த்த பின்னர் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?

இதேவேளை, பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹல்பத்தர பத்மே தான் செவ்வந்தி நேபாளத்திற்கு தப்பிச்செல்ல உதவினார். அவர் பொலிஸாரிடம் சிக்கிய பின்னர் செவ்வந்தி தொடர்பான உண்மைகளை கூறுவார் என அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறிருக்க, செவ்வந்தி ஏன் நேபாளை விட்டு செல்லாமல் இருந்தார்? இவ்வாறான விடயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1422711741165502
இந்தியாசெய்திகள்

இந்தியா-சீனா நேரடி விமானப் போக்குவரத்து: ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு புத்துயிர்!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நேரடி விமானச் சேவை, ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தடம்...

image 29c6aa6e37
உலகம்செய்திகள்

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில்  3 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா பெரும் வான்வழி...

Teachers and Principals Trade Union 1200x675px 24 10 25 1000x600 1
செய்திகள்இலங்கை

கல்வி மறுசீரமைப்பு குழப்பம்: அரசு மெளனம் காப்பதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த தரப்பினரால் எழுப்பப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு அரசாங்கம்...

india supermarket march 16 2021 reuters
செய்திகள்இலங்கை

பண்டிகைக் கால விலைவாசி உயர்வு: முறையாகத் திட்டமிட நுகர்வோர் முன்னணி வலியுறுத்தல்

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு...