25 8
இலங்கைசெய்திகள்

வீடு வீடாக சென்று பிரசாரம் செய்பவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு

Share

வீடு வீடாக சென்று பிரசாரம் செய்பவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு

ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்காக வீடு வீடாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வலியுறுத்தினார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ரத்நாயக்க, தற்போதைய சட்டத்தின் கீழ், வாக்காளர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதில் ஐந்து பேருக்கு மேற்பட்டவர்கள், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வது கண்டிப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வீடு வீடாகச் சென்று பிரசாரத்தின் போது அரசியல் அணிவகுப்புகளை நடத்துவது பொதுவாக சட்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களுக்கு மாத்திரமே விளம்பர சுவரொட்டிகளை காட்சிப்படுத்த அதிகாரம் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...