இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் டெங்கு
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் டெங்கு

Share

இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் டெங்கு

இலங்கையில் 2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தொற்று நோயியல் பிரிவு வழங்கிய தகவலின் படி, 2023 ஜனவரி முதல் – ஜுலை 19 ஆம் திகதிவரை நாட்டில், மொத்தம் 60,136 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய அதிகபட்சமான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 30,000 தொற்றுகள் பதிவாகியுள்ளன எனவும், இது மாகாணங்களின் அடிப்படையில் மிக அதிகம் எனவும் கூறப்படுகிறது.

டெங்கு நோய் பரவும் இடங்கள் அதிகமாக காணப்படும் 43 அதிக ஆபத்துள்ள பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 3,446 டெங்கு தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் மொத்தம் 38 இறப்புகள் பதிவாகியுள்ளன எனவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...