இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரை உச்சரிக்க அருகதையற்ற இனவாதிகள்

Share
tamilni 36 scaled
Share

விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரை உச்சரிக்க அருகதையற்ற இனவாதிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற இனவாதிகளுக்கு எந்த அருகதையும் கிடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய உரிமைக்காகப் போராடிய எங்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் நியாயமான நிலைப்பாடுளை நாங்கள் சுட்டிக்காட்டுவதற்கு தயங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் துதிபாடுவோரை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சிங்களக் கடும்போக்குவாத நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த கஜேந்திரன் எம்.பி மேலும் குறிப்பிடுகையில்,

சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் மிகக் கீழ்த்தனமான சிங்கள – பௌத்த இனவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றவர்கள். இங்கு ஏனைய இனத்தவர்கள் மதத்தவர்கள் வாழ்வதற்கு அவர்களுக்கு உடன்பாடில்லை. குறிப்பாகத் தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள்.

தங்களைப் போன்ற இனவெறியர்களின் செயற்பாடுகளாலேயே தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள் என்ற உண்மையை இன்று பெரும்பான்மையினத்தவர்களின் தரப்பில் இருந்தே சொல்லப்படுவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

தமிழ்த் தரப்பில் இருந்து உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளி அல்லது கொலை செய்து கதையை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த மூன்று இனவாதிகளும் இருக்கின்றார்கள் என்பதை அவர்களின் கருத்து வெளிப்படுத்துகின்றது.

இவர்களின் அச்சுறுத்தல்களுக்குத் தமிழ்ச் சமூகம் அடிபணியப்போவதில்லை. எங்களுடைய உரிமைக்காகப் போராடிய எங்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் நியாயமான நிலைப்பாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டுவதற்கு ஒருபோதும் தயங்கப்போவதில்லை என தெரிவித்தார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...