tamilni 36 scaled
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரை உச்சரிக்க அருகதையற்ற இனவாதிகள்

Share

விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரை உச்சரிக்க அருகதையற்ற இனவாதிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற இனவாதிகளுக்கு எந்த அருகதையும் கிடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய உரிமைக்காகப் போராடிய எங்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் நியாயமான நிலைப்பாடுளை நாங்கள் சுட்டிக்காட்டுவதற்கு தயங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் துதிபாடுவோரை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சிங்களக் கடும்போக்குவாத நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த கஜேந்திரன் எம்.பி மேலும் குறிப்பிடுகையில்,

சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் மிகக் கீழ்த்தனமான சிங்கள – பௌத்த இனவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றவர்கள். இங்கு ஏனைய இனத்தவர்கள் மதத்தவர்கள் வாழ்வதற்கு அவர்களுக்கு உடன்பாடில்லை. குறிப்பாகத் தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள்.

தங்களைப் போன்ற இனவெறியர்களின் செயற்பாடுகளாலேயே தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள் என்ற உண்மையை இன்று பெரும்பான்மையினத்தவர்களின் தரப்பில் இருந்தே சொல்லப்படுவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

தமிழ்த் தரப்பில் இருந்து உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளி அல்லது கொலை செய்து கதையை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த மூன்று இனவாதிகளும் இருக்கின்றார்கள் என்பதை அவர்களின் கருத்து வெளிப்படுத்துகின்றது.

இவர்களின் அச்சுறுத்தல்களுக்குத் தமிழ்ச் சமூகம் அடிபணியப்போவதில்லை. எங்களுடைய உரிமைக்காகப் போராடிய எங்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் நியாயமான நிலைப்பாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டுவதற்கு ஒருபோதும் தயங்கப்போவதில்லை என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
New Project 47 1024x576 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காசாளர்களைக் குறிவைக்கும் நூதன மோசடி: நாடு முழுவதும் கைவரிசை காட்டிய ரத்மலானை நபர் கொட்டாவையில் சிக்கினார்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, காசாளர்களை (Cashiers) மிகவும் சூட்சுமமான முறையில்...

26 696674a2371e4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணிப்பெண்ணை நிர்வாணமாக்கி காணொளி வெளியிட்ட வர்த்தகர் கைது: ஹிக்கடுவையில் பதுங்கியிருந்தபோது சிக்கினார்!

சமூக வலைத்தளங்களில் பரவிய பெண்ணொருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் கொடூரமான காணொளிச் சம்பவம் தொடர்பாக, பிரதான சந்தேக...

earthquake 083711893 16x9 0
செய்திகள்இந்தியா

டெல்லியில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவு!

இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (19) காலை லேசான நிலநடுக்கம்...

images 1 5
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட ஆபத்தானது: புதிய சட்டமூலம் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை!

இலங்கையில் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அல்லது உத்தேச “அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம்”...