tamilni 9 scaled
இலங்கைசெய்திகள்

இந்தியாவுடன் இணங்க தயார்! டக்ளஸ் அறிவிப்பு

Share

இந்தியாவுடன் இணங்க தயார்! டக்ளஸ் அறிவிப்பு

இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் இணக்கப்பாட்டுடன் பேச்சுக்கள் நடத்தத் தயாராக உள்ளதாக தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சருக்கு இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று(28) வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட கடற்றொழிலாளர்கள் நன்னீர் மீன்பிடியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பிலான இரு நாட்டு அரசுகளதும் பேச்சுக்கள் முன்னேற்றம் ஏதும் இருக்கிறதா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம்(27) தமிழ்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் தொலைபேசியில் பேசியிருந்தார்.

இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்றார் அத்தோடு செவ்வாய் மாலை தாங்கள் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் அவர் ஊடாக பாண்டிச்சேரி முதலமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் எனக்கு கூறப்பட்டது.

அதேநேரத்தில், என்னையும் அந்தக் கலந்துரையாடலுக்கு நேரில் அல்லது தொலைபேசியில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு நான் அதற்கு இணங்கியுள்ளேன்.

எனக்கு அவர்கள் உத்தரவாதம் தரவேண்டும் அத்தோடு அவர்களின் இழுவை மடிப்படகுகள் எங்கள் கடலுக்குள் வந்து வளங்களை சுரண்டுகின்ற மற்றும் அழிக்கின்ற எங்கள் கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவாதத்தினை தருவார்களாக இருந்தால் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு தயாராக இருக்கின்றேன் இதுதான் பேச்சுக்கான அடிப்படை” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...