இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பிக்கு குறித்து தீர்மானம்

tamilnig 12 scaled
Share

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பிக்கு குறித்து தீர்மானம்

பௌத்தத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ,சர்ச்சைக்குரிய காவி அங்கி அணிந்த துறவி இராமண்ண மகா நிகாயா துறவறத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த தீர்மானத்தை இலங்கை இராமண்ண மகா நிகாய மகாநாயக்க தேரர் வண.மகுலேவே விமலபிதான தேரர் பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.

இலங்கை இராமண்ண மகா நிகாயாவின் சங்க சபை குழு இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளது.

இலங்கை ராமண்ணா மகா நிகாயாவின் காரக மகா சங்க சபை 15 டிசம்பர் 2023 அன்று சர்ச்சைக்குரிய துறவியை இராமண்ண மகா நிகாயாவிலிருந்தும் துறவறத்திலிருந்தும் வெளியேற்றுவதற்கு ஏகமனதாகத் தீர்மானித்தது.

தன்னை ‘விஸ்வ புத்தர்’ என அடையாளப்படுத்திக் கொள்ளும் துறவி, கடந்த ஆண்டு டிசம்பரில், சமூக ஊடகங்களில் பௌத்தத்தை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சைபர் கிரைம் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) மீண்டும் கைது செய்யப்பட்ட குறித்த பிக்குவை ஜனவரி 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் சுனில் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...