tamilnig 12 scaled
இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பிக்கு குறித்து தீர்மானம்

Share

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பிக்கு குறித்து தீர்மானம்

பௌத்தத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ,சர்ச்சைக்குரிய காவி அங்கி அணிந்த துறவி இராமண்ண மகா நிகாயா துறவறத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த தீர்மானத்தை இலங்கை இராமண்ண மகா நிகாய மகாநாயக்க தேரர் வண.மகுலேவே விமலபிதான தேரர் பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.

இலங்கை இராமண்ண மகா நிகாயாவின் சங்க சபை குழு இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளது.

இலங்கை ராமண்ணா மகா நிகாயாவின் காரக மகா சங்க சபை 15 டிசம்பர் 2023 அன்று சர்ச்சைக்குரிய துறவியை இராமண்ண மகா நிகாயாவிலிருந்தும் துறவறத்திலிருந்தும் வெளியேற்றுவதற்கு ஏகமனதாகத் தீர்மானித்தது.

தன்னை ‘விஸ்வ புத்தர்’ என அடையாளப்படுத்திக் கொள்ளும் துறவி, கடந்த ஆண்டு டிசம்பரில், சமூக ஊடகங்களில் பௌத்தத்தை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சைபர் கிரைம் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) மீண்டும் கைது செய்யப்பட்ட குறித்த பிக்குவை ஜனவரி 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் சுனில் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...