14 25
இலங்கைசெய்திகள்

டில்வின் சில்வாவால் கட்சி உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை: சஜித் தரப்பு குற்றச்சாட்டு

Share

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தனது அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க கட்சி உறுப்பினர்களுக்கு தடை விதித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார(Nalin Bandara)தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

”நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவை “வைத்தியர்” என அடையாளப்படுத்திய நாடாளுமன்ற இணையத்தளத்தில் உள்ள பிழையான தகவல்கள், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவின் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் அரசாங்கத்தின் கூற்றுக்கள் நாடாளுமன்ற அதிகாரிகளை மையப்படுத்திய சதித்திட்டத்தை முன்வைத்துள்ளது.

இதை அவர்கள் நாடாளுமன்ற அதிகாரிகளின் சதி என்று சித்தரிக்க முயன்றனர்.

ஆனால் அந்த ஆவணம் அவைத் தலைவர் அலுவலகத்தில் இருந்து வந்தது என்பது இப்போது தெளிவாகிறது.

இப்போது என்ன சொல்வார்கள்?” இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பிலான விடயத்தை தெளிவுபடுத்துமாறு அமைச்சர் நாணயக்காரவை அழைத்திருந்தேன்.

நீதியமைச்சர் தனது கோரிக்கைகளை நிராகரித்துள்ளார். அவருக்கு கருத்து தெரிவிக்க கட்சியின் அனுமதி தேவை.

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா(Tilvin-Silva), தனது அனுமதியின்றி ஊடகங்கள் முன் தோன்ற கட்சி உறுப்பினர்களுக்கு தடை விதித்துள்ளார்’’ என்றார்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...