20 2
இலங்கைசெய்திகள்

ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறிய தருசி கருணாரத்ன

Share

ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறிய தருசி கருணாரத்ன

பரிஸில் (Paris) நடைபெற்று வரும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் (Olympics) போட்டிகளின் 800 மீட்டர் (800m) ஓட்டப்போட்டியில் இலங்கை சார்பில் பங்குபற்றிய தருசி கருணாரத்ன முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளார்.

குறித்த, 800 மீட்டர் ஓட்டப்போட்டி பிரான்ஸ் விளையாட்டரங்கில் நேற்றையதினம் சனிக்கிழமை (03) நடைபெற்றுள்ளது.

முதலாவதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகுதிகாண் சுற்றின் 6ஆவது போட்டியில் பங்குபற்றிய தருசி, 2 நிமிடங்கள் 07.76 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து கடைசி இடத்தைப் பெற்றார்.

ஒட்டுமொத்த நிலையில் தகுதிகாண் சுற்றில் பங்கேற்ற 50 பேரில் 45ஆவது இடத்தை தருசி பெற்றிருந்தார்.

இதனையடுத்து, நேற்று நடைபெற்ற இரண்டாம் வாய்ப்பு தகுதிகாண் சுற்றின் 4ஆவது போட்டியில் பங்குபற்றிய தருசி, 2 நிமிடங்கள் 06.66 செக்கன்களில் ஓடி முடித்து 7ஆம் இடத்தைப் பெற்று ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.

இரண்டாம் வாய்ப்பு தகதிகாண் சுற்றில் 4 போட்டிகளில் 31 வீராங்கனைகள் பங்குபற்றியதுடன் ஒட்டுமொத்த நிலையில் தருஷி 27ஆவது இடத்தைப் பெற்றார்.

இதற்கமைய, பரிஸ் ஒலிம்பிக்கில் முதல் சுற்றுடன் வெளியேறிய நான்காவது இலங்கையராக தருசி கருணாரட்ன உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...