rtjy 206 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பிள்ளையானின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்

Share

பிள்ளையானின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்

கடத்தல் மற்றும் கொலைகள் மூலம் இராஜாங்க அமைச்சர் சி. சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி காரியாலயத்தில் நேற்று முன்தினம் (20.09.2023) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சனல் 4 ஆவணப்படம் உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்பு சூத்திரதாரிகளை மிக தெளிவாக அடையாளப்படுத்தியதுடன் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த சூத்திரதாரிகள் இந்த மண்ணிலே செய்த அட்டூழியங்கள் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி எனக்கூறி மக்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்தி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ற பெயரில் புலிகள் என்ற நாமத்தை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்துவந்த ஒரு சூத்திரதாரியே பிள்ளையான்.

அவருடன் நெருக்கமாக இருந்த ஆசாத் மௌலானா மூலம் அந்த உண்மைகளை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து மக்கள் விழிப்படைந்துள்ளனர்.

எனவே இனியும் மக்கள் ஏமாறக்கூடாது. தமிழ் மக்கள் போராடிவந்த ஆயுத போராட்டத்தை கடந்த 13 வருடங்களாக இப்படிப்பட்டவர்கள் சிங்கள தேசத்துடன் இணைந்து காட்டிகொடுத்து தமிழ் மக்கள் தாய், தந்தை அற்ற அனாதைகளாக காணப்படுவதற்கு காரணமான பிள்ளையான் போன்ற நபர்கள் இன்று ஆதாரங்களுடன் பிடிபட்டுள்ளனர்.

பிள்ளையான் விடுதலைப்புலிகளில் இருந்து பிரிவதற்கு முன்னர் அவரின் குடும்ப பின்னனி அந்த பகுதி மக்களுக்கு தெரியும்.அவருக்கு எந்தவிதமான சொத்துக்களும் இல்லை. ஆனால் அண்மையிலே வீடியோ மூலம் வாழைச்சேனையில் பரம்பரைக் காணி இருப்பதாகத்தெரிவித்துள்ளார்.

இதனை பார்க்கும்போது இவர் ஊழல், இலஞ்சம், கொலைகள், கொள்ளைகள், கடத்தல் போன்ற செயல்கள் மூலம் கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்திருக்கின்றார் என அறிய முடிகின்றது.

எனவே இவ்வாறாக சேகரித்த அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு இந்த மாவட்டத்திலே இவரால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமென நீதி பிறப்பியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...