24 66c960896ec81
இலங்கை

வெற்றிடமான எம்.பி பதவி : தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விடுத்துள்ள அறிவிப்பு

Share

வெற்றிடமான எம்.பி பதவி : தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விடுத்துள்ள அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தலதா அத்துகோரல (Thalatha Atukorale) விலகியதை அடுத்து அந்த பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளார்.

இரத்தினபுரி (Ratnapura) தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல 2024 ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர (Kushani Rohanadeera) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64 (1) ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினரான தலதா அத்துகோரல தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

சிறுவர்களை தேடி நாடு முழுவதும் நடந்த தேடுதல் நடவடிக்கை

யாசகம் கேட்டல் மற்றும் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் சிறுவர்களை தேடி நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 5
இலங்கைசெய்திகள்

நாணயத்தாள்களை பயன்படுத்தும் மக்களுக்கான அறிவுறுத்தல்

கண்டி – ஹதரலியத்த பகுதியில் போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 4
இலங்கைசெய்திகள்

கொழும்பில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தொழிலதிபர் கைது

கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம, உரணாவ,...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered
இலங்கைசெய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு குறித்து மைத்திரி விளக்கம்

ஊழல் மோசடி குற்றச்சாட்டு குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் அளித்துள்ளார். அனுராதபுரம் எப்பாவெல...