7 7
இலங்கைசெய்திகள்

தாஜுதீனின் வாகனத்தைப் பின்தொடர்ந்த வாகனம் – புலனாய்வுப்பிரிவின்ர் வெளியிட்ட தகவல்

Share

றக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் மரணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது காரைப் பின்தொடர்ந்த ஜீப்பில், சந்தேகநபரான ‘கஜ்ஜா’ என்று அழைக்கப்படும் அருண விதானகமகே பயணித்திருக்கலாம் என்று குற்றப் புலனாய்வுத் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

தாஜுதீனின் கொலை தொடர்பாக, கடந்த 13 ஆண்டுகளாக குற்றப் புலனாய்வுத் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில் இக்கொலைக்கு நேரடியாகப் பொறுப்பானவர்களை இன்னும் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மித்தேனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட கஜ்ஜா, தாஜுதீனின் மரணத்திற்கு முன்பு அவரது காரைப் பின்தொடர்ந்த ஜீப்பில் பயணித்ததை அவரது மனைவி புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.டி.வி. காட்சிகள் அவருக்குக் காண்பிக்கப்பட்டபோது அவரது மனைவியால் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, காட்சிகளில் காணப்பட்ட நபர் கஜ்ஜா என்பதினை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த தடயத்தினை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையிலும் ஏனையவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை ‘கஜ்ஜா’ என்று அழைக்கப்படும் அருண விதானகமகேவின் மூத்த புதல்வர், அக்காணொளியில் காணப்படுவது தனது தந்தையார் அல்ல என்றும் அது சம்பந்தமாக விசாரணை மீள ஆரம்பிக்குமாறும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...