7 7
இலங்கைசெய்திகள்

தாஜுதீனின் வாகனத்தைப் பின்தொடர்ந்த வாகனம் – புலனாய்வுப்பிரிவின்ர் வெளியிட்ட தகவல்

Share

றக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் மரணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது காரைப் பின்தொடர்ந்த ஜீப்பில், சந்தேகநபரான ‘கஜ்ஜா’ என்று அழைக்கப்படும் அருண விதானகமகே பயணித்திருக்கலாம் என்று குற்றப் புலனாய்வுத் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

தாஜுதீனின் கொலை தொடர்பாக, கடந்த 13 ஆண்டுகளாக குற்றப் புலனாய்வுத் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில் இக்கொலைக்கு நேரடியாகப் பொறுப்பானவர்களை இன்னும் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மித்தேனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட கஜ்ஜா, தாஜுதீனின் மரணத்திற்கு முன்பு அவரது காரைப் பின்தொடர்ந்த ஜீப்பில் பயணித்ததை அவரது மனைவி புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.டி.வி. காட்சிகள் அவருக்குக் காண்பிக்கப்பட்டபோது அவரது மனைவியால் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, காட்சிகளில் காணப்பட்ட நபர் கஜ்ஜா என்பதினை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த தடயத்தினை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையிலும் ஏனையவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை ‘கஜ்ஜா’ என்று அழைக்கப்படும் அருண விதானகமகேவின் மூத்த புதல்வர், அக்காணொளியில் காணப்படுவது தனது தந்தையார் அல்ல என்றும் அது சம்பந்தமாக விசாரணை மீள ஆரம்பிக்குமாறும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...