Untitled 1 42 scaled
இலங்கைசெய்திகள்

38 முறை வானத்தை நோக்கிச் சுட்ட பொலிஸார்

Share

ஹகுரன்கெத்த பிரதேசத்தில் சந்தேக நபர்களை கைது செய்யாததால் 200க்கும் மேற்பட்டோர் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்திற்குள் நேற்றிரவு இரவு ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவொன்று பிரவேசிக்க முயற்சித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து தெரியப்படுத்தப்பட்ட போதிலும், அந்த கும்பல் கலவரம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், மேலும் ஆத்திரமடைந்த மக்கள் பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலை உடைத்து பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.

பெரும்பாலானோர் மது அருந்திக் கொண்டிருந்ததை பொலிஸார் அவதானித்ததையடுத்து, அங்கிருந்த சிலர் பொலிஸார் மீது கற்களை வீசியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அந்தக் குழுவின் கலகத்தனமான நடத்தைக்கமைய, பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தால் ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் கடமையில் இருந்த அதிகாரிகளின் உயிர் பாதுகாப்பு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுமார் 38 முறை வானத்தை நோக்கிச் சுட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், கலவரக்காரர்கள் பொலிஸ் நிலைய வளாகத்துக்குள் பிரவேசிப்பதைத் தவிர்த்துவிட்டு, ஹகுரன்கெத்த-கண்டியூர பிரதான வீதியில் ஏறக்குறைய ஒரு மணிநேரம் தங்கியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.

சம்பவத்தினால் உயிர் சேதம் அல்லது காயம் ஏற்படவில்லை. எனினும், பொலிஸாரின் பிரதான வாயில் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

குழப்பத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஹகுரன்கெத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹகுரன்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியதிலகபுர பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹகுராங்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பாக அவரை சிறையில் அடைத்தனர். குற்றத்துடன் தொடர்புடைய மேலும் 8 சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு குறித்த குழுவினர் இவ்வாறு நடந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...