20 3
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இரவில் ஏற்பட்ட பதற்ற நிலை : கடும் கோபத்தில் பயணிகள்

Share

கொழும்பு, கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்தில் நேற்று இரவு பயணிகளின் செயற்பாட்டால் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலி நோக்கி செல்லும் இரவுநேர தபால் தொடருந்து பழுதடைந்ததால், கடலோரப் பாதையில் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டிக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் தொடருந்து பழுதடைந்துள்ளது. இதனால், மேலும் இரண்டு தொடருந்துகள் அந்தப் பாதையால் பயணிப்பதில் தாமதமாகின.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் பயணிகள் ஆக்ரோஷமாக செயற்பட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

பயணிகளின் கடும் கோபத்தினால் அச்சமடைந்த என்ஜின் ஓட்டுநரும் உதவியாளரும் என்ஜின் அறைக்குள் நுழைந்து தங்களை தாங்களே பூட்டிக் கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...