20 3
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இரவில் ஏற்பட்ட பதற்ற நிலை : கடும் கோபத்தில் பயணிகள்

Share

கொழும்பு, கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்தில் நேற்று இரவு பயணிகளின் செயற்பாட்டால் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலி நோக்கி செல்லும் இரவுநேர தபால் தொடருந்து பழுதடைந்ததால், கடலோரப் பாதையில் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டிக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் தொடருந்து பழுதடைந்துள்ளது. இதனால், மேலும் இரண்டு தொடருந்துகள் அந்தப் பாதையால் பயணிப்பதில் தாமதமாகின.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் பயணிகள் ஆக்ரோஷமாக செயற்பட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

பயணிகளின் கடும் கோபத்தினால் அச்சமடைந்த என்ஜின் ஓட்டுநரும் உதவியாளரும் என்ஜின் அறைக்குள் நுழைந்து தங்களை தாங்களே பூட்டிக் கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...