tamilni 60 scaled
இலங்கைசெய்திகள்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் குழப்பநிலை

Share

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் குழப்பநிலை

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

10 கைதிகள் மற்றும் ஒரு இராணுவ சிப்பாய் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் தற்போது வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மோதலில் கைதிகள் புனர்வாழ்வு நிலையத்தின் சமையல் அறை மற்றும் பல இடங்களை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

புனர்வாழ்வு நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கும் மோதலை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களும் சோதனைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டன.

இதேவேளை, நேற்று காலை தப்பியோடிய 20 பேர் கொண்ட கைதிகள் சோமாவதி புனித யாத்திரைக்காக வந்த பேருந்தை கடத்த முற்பட்டதுடன், வர்த்தகர் ஒருவரின் 50000 ரூபாய் பணம் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகளும் அபகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலின் போது புனர்வாழ்வு நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தப்பியோடிய 20 கைதிகளையும் கைது செய்யப்பட்ட 14 கைதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 34 கைதிகளும் இன்று பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இராணுவமும் பொலிஸாரும் இணைந்து புனர்வாழ்வு நிலையத்தில் நிலைமையை முற்றாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகள் இதற்கு முன்னரும் பல தடவைகள் மோதல்களில் ஈடுபட்டு தப்பியோடியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...