17 8
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்கு ஆதரவாக நடந்த பிரச்சாரத்தில் ஏற்பட்ட குழப்பம்

Share

ஜனாதிபதிக்கு ஆதரவாக நடந்த பிரச்சாரத்தில் ஏற்பட்ட குழப்பம்

தம்புள்ளை நகரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், துண்டுபிரசுரம் விநியோகித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள முற்பட்டபோது பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

​பொலிஸார் வந்து இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தியதால், நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதிக்கு ஆதரவாக இராஜாங்க அமைச்சர் மற்றும் குழுவினர் துண்டுபிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த போது, ​​மற்றொரு குழுவினர் வந்து ஊ ஊ என கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்ததால், சம்பவம் மேலும் பரபரப்பாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த தம்புள்ளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர்,

“இந்த நேரத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் என இராஜாங்க அமைச்சரிடம் கூறினோம். அப்படி செய்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என அறிவித்தோம்.

சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். இதுபோன்ற செயல்களை தற்போது அனுமதிக்க முடியாது. எனவே, இப்பணியை உடனடியாக நிறுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, அந்த நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு இராஜாங்க அமைச்சர் வெளியேறினார். பின்னர் அப்பகுதியில் அமைதி நிலவியது” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...