யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!

Share

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது மாணவியிடம் ஆசிரியர் ஒருவரால் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் கடந்த ஜூலை 31ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அந்த மாணவியால் பாடசாலை நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், இதனை அந்த பாடசாலையின் நிர்வாகத்தினர் வெளியே தெரியாமல் மூடி மறைப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊர்காவற்துறை மற்றும் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி அமைப்பாளர் சதாசிவத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில் சதாசிவம் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் (04-08-2023) அந்த ஆசிரியரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து, நேற்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது குறித்த ஆசிரியருக்கு பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதி அளித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23305205 elan 648
செய்திகள்உலகம்

உலகின் முதல் 600 பில்லியன் டொலர் அதிபதி: எலான் மஸ்க் புதிய வரலாற்று சாதனை!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், உலக வரலாற்றிலேயே...

1653799819 elephant pearls
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தளையில் கஜ முத்துக்களுடன் சந்தேக நபர் கைது: ஒரு மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சி!

மாத்தளை நகரில் சட்டவிரோதமான முறையில் கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற ஒருவரை வனவிலங்கு பாதுகாப்புத்...

Namal Rajapksha SLPP Presidential Candidate
செய்திகள்அரசியல்இலங்கை

நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான ‘கிரிஷ் ஒப்பந்த’ வழக்கு: பெப்ரவரி 16-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிரிஷ் (Krish) நிறுவன ஒப்பந்தம் தொடர்பான நிதி முறைகேடு குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு...

25 692cda477c3f7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு நாயாறு பாலம் மீட்பு: இராணுவ பொறியாளர்களின் துரித நடவடிக்கையால் மீண்டும் போக்குவரத்து சீர்!

‘டிட்வா’ (Ditwah) புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் முற்றாகச் சேதமடைந்திருந்த முல்லைத்தீவு – நாயாறு...