24 662f1044ed3f9
இலங்கைசெய்திகள்

தேயிலை பெருந்தோட்டத்துறை தொடர்பில் எச்சரிக்கை

Share

தேயிலை பெருந்தோட்டத்துறை தொடர்பில் எச்சரிக்கை

தேயிலை பெருந்தோட்டத்துறை வங்குரோத்து அடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொசான் ராஜதுரை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பெருந்தோட்டத்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

உற்பத்தி வினைத்திறனை அடிப்படையாகக் கொண்ட சம்பள அதிகரிப்பு முறைமையே உசிதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உற்பத்தி வினைத்திறனை கருத்திற் கொள்ளாத சம்பள அதிகரிப்புக்கள் ஒட்டுமொத்த பெருந்தோட்டத்துறையை வங்குரோத்து அடையச் செய்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாள் சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவர் நாளொன்றுக்கு சுமார் இரண்டாயிரம் ரூபா சம்பளம் ஈட்டக்கூடிய யோசனை ஒன்றை தமது சம்மேளனம் முன்மொழிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முன்மொழிவானது உற்பத்தி வினைத்திறனை அடிப்படடயாகக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டாக இணைந்து கிரமமான ஓர் முறையின் கீழ் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...