7 15
இலங்கைசெய்திகள்

காகம் சங்கைப் பார்த்து கறுப்பு என்றது – கடுமையாக சாடிய வேட்பாளர்

Share

காகம் சங்கைப் பார்த்து கறுப்பு என்றது – கடுமையாக சாடிய வேட்பாளர்

சங்கு சின்னத்தின் மீது அச்சப்பட்ட எதிர்த்தரப்பினர் எங்கள் மீது பொய்யான அவதூறுகளைப் பரப்புகின்றனர் என ரெலோ அமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் (Surendran Guruswamy) தெரிவித்துள்ளார்.

எங்களுக்குள்ளே இருக்கக்கின்ற, கையூட்டுக்கு மயங்கக்கூடிய, சொற்படிவித்தைகளுக்கு மயங்கக்கூடிய, எதற்கும் விலை போகக்கூடிய அயோக்கியர்களை இனம் கண்டு அவர்களுடாக எங்களுடைய வெற்றி வேட்பாளர்களுக்கு எதிராக சேறு பூசிக்கொண்டு இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அராலியில் நேற்று இரவு (09) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான செயற்பாடுகளுக்கு பின்னணியிலே பல நிதி மோசடியில் ஈடுபட்டவர்களும், பல குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும், அவர்களை காப்பாற்றுவதற்காக சட்டத்தை பயன்படுத்துபவர்களும் இணைந்து இந்த அவதூறுகளை பரப்புவதில் முன்னணி வகிக்கின்றார்கள்.

காகம் சங்கை திரும்பிப் பார்த்து கறுப்பு என்று சொல்வது போல குற்றவாளிகளாக சிறையிலே மூன்று வருடங்களுக்கு மேலே தனது வாழ்க்கையை கழித்தவர்களும், பல குற்றங்களை புரிந்து கொண்டிருப்பவர்களும், தாங்கள் அடுத்தவர்களை குற்றவாளியாக்கிவிட்டால் தாங்கள் சுற்றவாளியாகி விடுவார்கள் என்று கற்பனையிலே மற்றவர்கள் மீது குறை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

தென் இலங்கையின் சதித்திட்டத்திற்கும், கையூட்டுக்களுக்கு மயங்கியவர்கள் போன்றோரை நீங்கள் இனம் கண்டு, உங்களுடைய வாக்குகளை சரியானவர்களுக்கு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
16 11
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு ஊழல்: முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ‘எயார்பஸ்’ (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி...

15 11
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: FBI அறிக்கையை மேற்கோள் காட்டி சஞ்சீவ எதிரிமான்ன விளக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குத் தேவாலயங்களைக் காட்ட சுரேஷ் சலே போன்ற ஒருவரின் உதவி...

14 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்: இயந்திரங்களுக்குச் சேதமில்லை என கோப் (COPE) குழு உறுதி!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியினால், அங்குள்ள மின் உற்பத்தி...

13 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மொரட்டுவையில் திருமண நாளன்று இளைஞர் கொலை: மூவர் கைது!

மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை...