rtjy 75 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கையர் உட்பட 4 பேர் தமிழக பொலிஸாரால் கைது

Share

இலங்கையர் உட்பட 4 பேர் தமிழக பொலிஸாரால் கைது

சட்டவிரோத பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சுமார் ஒரு கோடி இந்திய ரூபாய் பணத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை பிரஜை உட்பட 4 பேரை தமிழகம் சென்னை மாநகர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பொலிஸ் நிலைய அதிகாரிகள், வான் ஒன்றுக்குள் இருந்த 4 பேரை விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த வான் வண்டியை சோதனை செய்ததில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய ரூபாய் தாள்கள் அடங்கிய பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த பணத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதற்கமைய குறித்த நான்கு பேருடன், கைப்பற்றப்பட்ட பணம் கே.கே.நகர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...