1 1 20
இலங்கைசெய்திகள்

தமிழக கடற்றொழிலாளர்கள் கைது! அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்

Share

தமிழக கடற்றொழிலாளர்கள் கைது! அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்

கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 40 தமிழக கடற்றொழிலாளர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளமை, இந்தியாவின் (India) இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நீதி கோரி தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது, மீண்டும் 08 கடற்றொழிலாளர்கள் (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 2024ஆம் ஆண்டில் மட்டும் தமிழக கடற்றொழிலாளர்கள் 569 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. தமிழக கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான 73 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 8 இந்திய கடற்றொழிலாளர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை பதில் நீதவான் ஷாலினி ஜெயபாலச்சந்திரன் முன்னிலையில் அவர்கள் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image aa5ec14948
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு: ‘பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது, புதிய தீர்வுக்கு ஒத்துழைப்பு தேவை’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக்...

image 8788205535
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை அகற்றம்: ‘இது இன மோதல் அல்ல, பொலிஸாரே மோசமாக நடந்துகொண்டனர்’ – கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர்!

திருகோணமலைக் கடற்கரையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயத்திலும், பின்னர் அச்சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட விடயத்திலும் இங்கு...

Anura Kumara Dissanayake and Sajith Premadasa
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடகங்களை நிறுத்திவிட்டுப் பதில்களையும் தேர்தலையும் நடத்துங்கள் – சஜித் பிரேமதாச ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஊடக நிறுவனங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கைகள் வெளியிடுவதற்குப் பதிலாக, அவர்களுக்கு எதிராக...

images 21
செய்திகள்அரசியல்இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் கல்வித் தகுதி சர்ச்சை: ‘அவதூறுகளுக்கு நுகேகொடப் பேரணியில் பதிலளிப்பேன்’ – நிராகரிப்பு!

தனது கல்வித் தகுதிகள் குறித்துப் பரவி வரும் கூற்றுக்களை இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய...