17 12
இலங்கைசெய்திகள்

சீன தூதுவரை சந்தித்த தமிழ் எம்.பிக்கள்

Share

சீன தூதுவரை சந்தித்த தமிழ் எம்.பிக்கள்

வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவுடன் (China) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ராசபுத்திரன் இராசமாணிக்கம் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ சென்ஹோங் (Qi Zhenhong) ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தற்போதைய விவகாரங்கள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பில் மிகவும் சுமுகமான பயனுள்ள கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2022 டிசம்பரில் சாணக்கியன், சீனா மகிந்த ராஜபக்சவின் நண்பன் என்றும் இலங்கையின் நண்பன் அல்ல என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

எனவே ‘சீனா வீட்டுக்குச் செல்;’ என்ற பிரசாரத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...