246808581 279894364001626 8008279032184279767 n 850x560 1
இலங்கைஅரசியல்செய்திகள்

பசறை பிரதேச சபையில் தமிழ்மொழி புறக்கணிப்பு!

Share

பசறை பிரதேச சபையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பசறை பிரதேச சபை ஊடாக முன்னெடுக்கப்படும் ‘ஒலிபரப்பு அறிவுறுத்தல்கள்’ அனைத்தும் தனிச் சிங்கள மொழியில் மட்டும் அமைவதினால் மொழி புரியாத தமிழ் பேசும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

பசறை பிரதேசத்தில் பிரதேச சபையில் 07 தமிழ் பேசும் உறுப்பினர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் நிலையில், 52 வீதம் தமிழ் பேசும் மக்களும் இருந்து வருகின்றனர்.

இத்தகைய ஆரோக்கியச்சூழல் இருந்த போதிலும், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

பிரதேச சபையினால் பசறை பிரதேசத்தில் நடாத்தப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மற்றும் அவசர அறிவுறுத்தல்கள் வாகனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் ஒலிபரப்புக்கள் அனைத்துமே, தனிச்சிங்கள மொழியிலேயே, மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் மொழிபுரியாத தமிழ் பேசும் மக்கள், குறிப்பிட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவோ, அவசர அறிவுறுத்தல்கள் பற்றியோ அறிவதற்கு வாய்ப்பில்லை.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...