24 66196b0c44f84
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் அவசியம்

Share

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் அவசியம்

இன்றைய அரசியல், பொருளாதார சூழமைகளில் தமிழ் மக்கள் தங்கள் இருப்பை நிலை நிறுத்தவும், உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, காலங்காலமாக நாங்கள் ஜனாதிபதித் தேர்தல்களில் யாரேனும் ஒரு பெரும்பான்மைக் கட்சியின் வேட்பாளரையே ஆதரித்து வந்துள்ளோம்.

ஆனால் அது எத்தகைய மோசமான முடிவென்பதை வரலாறு பட்டுணரச் செய்தபின்னும் கூட, இன்னும் அதிலிருந்து பாடம் கற்கத் தயாரற்றவர்களாகவே நாம் உள்ளோம். எமது இனத்தை அழித்த இறுதிப்போரை முன்னின்றி நடத்திய சரத் பொன்சேகாவையும், அந்த இறுதிப்போரின் கடைசி நாள்களில் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பு வகித்த மைத்திரிபால சிறிசேனவையும், கடந்த தேர்தலில் சஜித் பிரேமதாஸவையும் ஆதரித்து கடைசியில் என்ன கண்டோம்?

அவர்கள் எங்கள் வாக்குகளைப் பெற்றுவிட்டு, சராசரிப் பேரினவாதப் போக்குடனேயே தமிழர் பிரச்சினைகளை அணுகினரே தவிர, எமது வாக்குகளும் அவர்களின் வெற்றிக்கு காரணம் என்ற நன்றி சிறிதும் காட்டவில்லை.

இப்படி பேரினவாதக் கட்சி களமிறக்கும் வேட்பாளர்களுக்கு நம்பி வாக்களித்து ஏமாறுவதை இனியும் தொடர்வது இனத்தின் இருப்புக்கு ஆரோக்கியமல்ல. அப்படியானால் தமிழ்ப்பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது ஆரோக்கியமானதா? என்ற கேள்வி எழலாம். தமிழ்க் கட்சிகளால் ஒரு பொதுவேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டால், ஒட்டுமொத்த தமிழ்மக்களின் வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் கிடைத்தாலும் கூட அந்த வேட்பாளரால் வெற்றிபெற முடியாதென்பது வெளிப்படையானதே.

ஆனாலும் அந்தத் தோல்வியிலும் நாம் சில வெற்றிகளை அடையமுடியும். தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும், தமிழ் மக்களின் அபிலாழசை இலங்கையின் பெரும்பான்மைப் போக்குக்கு மாறானது எனவும், உரிமைக்கான எமது ஒன்றுபட்ட வேட்கையையும் பொதுவேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் நாம் உணர்த்தமுடியும்.

அப்படி அவர்கள் உணராவிட்டாலும் அதுகுறித்து நாம் கவலையடையத் தேவையில்லை. ஏனெனில் பேரினவாதக் கட்சிகளின் வேட்பாளருக்கு வாக்களித்தாலும் ஏதும் அதிசயம் நிகழ்ந்துவிடப்போவதில்லையே? ஆனால் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், பேரினக்கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்கும் கருத்து நிலையை தமிழ்மக்களிடம் சிலர் விதைக்க முனைகின்றனர்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற கருதுகோள் முளையில் இருக்கும்போதே, அது ராஜபக்சக்களின் சதி என்று பதறுகின்றனர். தங்களின் திட்டங்கள் பாழாகிவிட்டமையும், கிடைக்கவேண்டிய வரப்பிரசாதங்கள் இல்லாமல் போய்விடுமோ என்ற ஆதங்கமுமே இந்தப் பதற்றத்துக்கு மிகமுக்கியமான காரணங்கள்.

ஆனால் உண்மையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணைசெய்கிறார்கள் என்பதே உண்மை, மீண்டுமொருமுறை மக்களைப் படுகுழிக்குள் தள்ளிவிடவே இவர்கள் எத்தனிக்கின்றனர்.

எனவே இந்தத் திசைமாற்றல்களுக்கு எடுபடாமல், பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கருவோடு ஒன்றித்து, எமது உரிமைக்குரலை உலகறியச் செய்வதே காலப்பொருத்தம்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மாத்திரமே. தமிழ்ப் பொதுவேட்பாளர் குறித்து கட்சியே இறுதி முடிவெடுக்கும், அந்த முடிவு கடந்த காலங்களைப் போல மீண்டும் இருண்ட யுகத்துக்குள் எமதினத்தை மூழ்கடிக்காமல், ஒளிமயமானதாக, தீர்க்கமானதாக அமைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...