24 66c9dee288d74
இலங்கை

கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் தமிழ் பொது வேட்பாளர்

Share

கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் தமிழ் பொது வேட்பாளர்

யாழ் மாவட்டக் கூட்டுறவு அமைப்புகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனிற்கும் (P. Arianetheran) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று (24) நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள பா. அரியநேத்திரன் பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக யாழ் மாவட்டக் கூட்டுறவு அமைப்புகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஜங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சமூக அரசியற் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன் (K. Arundhavapalan) தமிழ் மக்கள் பொதுச் சபையைச் சார்ந்த நிலாந்தன் (Nilanthan) ஆகியோரும் கலந்துகொண்டு தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பனமுராவில் பயங்கரம்: 46 வயது நபர் அடித்துக் கொலை, இருவர் கைது!

இரத்தினபுரி மாவட்டம், பனமுரா பகுதியில் 46 வயதுடைய நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொலை...

world 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்: மீண்டும் பணிக்குத் திரும்பினர்!

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்திருந்த நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் இன்று (ஏப்ரல்...