4 24
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு தெரிவான தமிழர் அணியினரின் முடிவு வெளியானது

Share

கொழும்பு மாநகரசபைக்கு தெரிவான பல சுயாதீன குழு உறுப்பினர்களின் ஆதரவை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நிர்வாகத்தை அமைக்கத் தேவையான 59 இடங்களைக் கொண்ட பெரும்பான்மையை விட குறைவாகவே, தேசிய மக்கள் சக்திக்கான உறுப்பினர் எண்ணிக்கை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025 மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கொழும்பு மாநகரசபையின் 117 இடங்களில் தேசிய மக்கள் சக்தி 48 இடங்களில் வெற்றி பெற்றது இதன் மூலம் மாநகரசபையில் மிகப்பெரிய தனிக் கட்சியாக உருவெடுத்தது.

இந்த நிலையில், கொழும்பு மாநகர சபைக்காக போட்டியிட்ட ஐந்து குழுக்களின் 9 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கொழும்பு மாநகர சபைக்காக போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை பெற்றுள்ள கே.டி.குருசுவாமி தலைமையிலான தமிழர் அணியை நேற்று சந்தித்துள்ளார்.

இதன்போது தமிழர் அணி, தமது ஆதரவை ஜனாதிபதியின் கட்சிக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இதனை தவிர ஏனைய 7 பேரும் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்குகிறார்களா என்ற விடயம் இன்னும் தெரியவரவில்லை.

அத்துடன் 59 என்ற பெரும்பான்மையை பெற தேசிய மக்கள் சக்திக்கு வேறு எந்த கட்சிகள் ஆதரவளிக்கின்றன என்ற தகவலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகளை உள்ளடக்கிய ஒரு பரந்த கூட்டணியை உருவாக்கி மாநகர சபையின் நிர்வாகத்தை கைப்பற்ற முனைப்புக்காட்டி வருகிறது.

கொழும்பு மாநகர சபையில் இடப் பகிர்வை பொறுத்தவரையில், தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களை கொண்டிருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 13 ஆசனங்களையும், பொதுஜன பெரமுன 5 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களையும் கொண்டிருக்கின்றன.

சுயாதீனக்குழு 3 ஆசனங்களையும், சர்வஜன பலய 2 ஆசனங்களையும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு 2 ஆசனங்களையும், சுயாதீனக்குழு ஐந்து, 2 ஆசனங்களையும், சுயாதீன குழு இரண்டு 2 ஆசனங்களையும், சுயாதீனக்குழு ஒன்று 2 ஆசனத்தையும், சுயாதீனக்குழு இரண்டு ஒரு ஆசனத்தையும், கொண்டிருக்கின்றன.

அதேநேரம் தேசிய சுதந்திர முன்னணி 1 இடத்தையும், ஏனைய ஐந்து அரசியல் கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் கொண்டிருக்கின்றன.

இதன்படி பெரும்பான்மை வரம்பு 59ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு மாநகரசபையின் ஆரம்ப அமர்வு ஜூன் 2ம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது 117 உறுப்பினர்களும் மாநகர முதல்வரை தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்கள்.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...