24 8
இலங்கைசெய்திகள்

சர்வதேச மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அதிகரித்த சுவிட்சர்லாந்து கல்விநிறுவனம்

Share

சர்வதேச மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அதிகரித்த சுவிட்சர்லாந்து கல்விநிறுவனம்

சுவிட்சர்லாந்தில்(Switzerland) சர்வதேச மாணவர்களின் கல்விக்கட்டணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க, சுவிஸ் கல்வி நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடா போன்ற நாடுகள் உள்ளூர் மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களுக்கு கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிப்பதை வழக்கமாகவே கொண்டுள்ளன.

அந்த வகையில், தற்போது சுவிட்சர்லாந்தின் The Federal Institutes of Technology (ETH) என்னும் கல்வி நிறுவனம், வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

தற்போது 730 சுவிஸ் ஃப்ராங்குகள் கல்விக்கட்டணம் செலுத்தும் வெளிநாட்டு மாணவர்கள், 2025ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் துவங்கும் செமஸ்டர் முதல், 2.190 சுவிஸ் ஃப்ராங்குகள் கல்விக்கட்டணம் செலுத்தவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூரிச்சிலுள்ள ETH கல்வி நிறுவனத்தைப் பொறுத்தவரை, சுமார் 40 சதவிகித மாணவ மாணவியர் வெளிநாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கல்வி கற்க வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...