tamilni 123 scaled
இலங்கைசெய்திகள்

சுவீடனில் படிப்பதற்காக காத்திருக்கும் இலங்கை மாணவர்களின் நிலை

Share

சுவீடனில் படிப்பதற்காக காத்திருக்கும் இலங்கை மாணவர்களின் நிலை

சுவீடனில் உயர்கல்வி படிப்பதற்காக சுமார் 510 இலங்கை மாணவர்கள் அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தாலும், நாட்டிற்குள் நுழைவதற்கு இன்னும் ஒப்புதல் பெற முடியாமல் போயுள்ளது.

இதனால் மாணவர்கள் மனவிரக்தியடைந்து நம்பிக்கையற்றவர்களாகவும் மாறியுள்ளனர் என சுவீடன் உயர்கல்வி மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த மாணவர்களில் 30 முதல் 75 இலட்சம் வரை பணம் செலுத்தியவர்கள் உள்ளதாக நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் அரவிந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

சுவீடன் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறுவதற்கு சுமார் 980 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 407 பேர் வீசா பெற்றுள்ளனர். ஆனால் எஞ்சியவர்களுக்கு வீசா வழங்கப்படுமா என்பதை அந்த நாடு அறிவிக்கவில்லை.

நாட்டில் சுவீடன் தூதரகம் இல்லாததால், இந்தியாவில் உள்ள டெல்லி தூதரகத்தில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், பல மாணவர்கள் டெல்லி தூதரகத்திற்குச் சென்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை நல்ல பதில் கிடைக்கவில்லை.

சுவீடன் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்த பல பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நிறுத்திவிட்டனர்.

சில பல்கலைக்கழகங்கள் அவர்களின் கோரிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு காலத்தை நீட்டித்தது. ஆனால் சுவீடனில் குடியேற்ற நிறுவனம் ஒப்புதல் அளிக்காததால் உயர்கல்வி அனுமதிகளை இழந்துவிட்டனர்.

அத்துடன் சில மாணவர்கள் செலுத்திய பணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...