7 2
இலங்கைசெய்திகள்

யாழில் தமிழினி மரணத்தில் சந்தேகம்: விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

Share

யாழில் தமிழினி மரணத்தில் சந்தேகம்: விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

தீயில் கருகி உயிரிழந்த சாவகச்சேரி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சதீஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சம்பவம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளராக இருந்த தமிழினி, கடந்த பெப்ரவரி மாதம் 16ம் திகதி தீயில் கருகி உயிரிழந்திருந்தார்.

தற்செயலான தீ விபத்தினால் தன் உடம்பில் தீப்பற்றிக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், அவரது மரணம் விபத்து மரணம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

எனினும் தமிழினியின் தகப்பனார் பீ. சண்முகராஜா, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது கொலையாக இருக்கக் கூடும் என்பதால் மீண்டும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில் நேற்றைய தினம் (01) தமிழினி மரணம் தொடர்பான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...