tamilni 246 scaled
இலங்கைசெய்திகள்

பல இலட்சம் மோசடி செய்த சந்தேகநபர் கைது

Share

பல இலட்சம் மோசடி செய்த சந்தேகநபர் கைது

அவுஸ்திரேலியா அனுப்புவதாக கூறி பெருமளவிளான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் யாழ்ப்பாண மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விளம்பரங்கள் மூலமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அறிமுகமாகி கட்டம் கட்டங்களாக 75 லட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிட்டுள்ளார்.

வங்கியில் பணம் வைப்பிலிட்டு நீண்ட காலங்களாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த குழுவினர், கொழும்பினைச் சேர்ந்த சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை இந்தச் சந்தேகநபரால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...