யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (நவம்பர் 24) காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மது அருந்தச் சென்ற நபர் ஒருவர், இருவரால் தாக்குதலுக்கு உள்ளானார்.
தாக்குதலுக்கு உள்ளான அவர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாக்குதலை நடத்திய இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், அவர்களில் ஒருவரை இன்றைய தினம் காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காங்கேசன்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

