இலங்கைசெய்திகள்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே நிறைவேற்று அதிகாரம் உண்டு: சுசில் பிரேமஜயந்த

Share
5 34
Share

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே நிறைவேற்று அதிகாரம் உண்டு: சுசில் பிரேமஜயந்த

நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றில் நேற்று(25) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தில் ஒரு பகுதியாகும்.

நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது. அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளமுடியாது.

அமைச்சரவையில் கலந்துரையாட முடியுமே தவிர தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

அந்த விடயம் தொடர்பாக 9 பேரினால் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தினை அமைச்சரவையில் பரிசீலிக்க முடியும்.

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக நாம் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் அந்த தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவது யார் என்ற கேள்வி எழுகின்றது.

அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் வழங்கப்பட்ட நியமனம் ஒன்றுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக அரசியலமைப்பு பேரவையில் மீண்டும் கலந்துரையாடப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...