யாழில் சிங்க கொடியை உயர்த்தி பொன்சோகாவுடன் சம்பந்தன் கூறிய விடயம்!
இலங்கைசெய்திகள்

யாழில் சிங்க கொடியை உயர்த்தி பொன்சோகாவுடன் சம்பந்தன் கூறிய விடயம்!

Share

யாழில் சிங்க கொடியை உயர்த்தி பொன்சோகாவுடன் சம்பந்தன் கூறிய விடயம்!

இந்த நாட்டு இளைஞர்கள் இரத்தம் சிந்தும் யுத்தமொன்றையா மீண்டும் கேட்கின்றீர்கள் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (20.07.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அதிகாரப் பகிர்வு குறித்து நான்கு கட்ட பேச்சுக்களை ரணில் விக்ரமசிங்க நடத்தியுள்ளார்.

இதனை நான் சிங்களத்தில் கூறியாக வேண்டும். இந்த அதிகார பகிர்வு பேச்சுக்களில் பங்கேற்ற தமிழ் தேசியவாதிகள் வெளியே சென்று கூறுகின்றனர் இது தேவையற்றது.

சமஷ்டியை அடையாமல் இதனை முடிக்க மாட்டோம் என கூறுகின்றனர். நான் அவர்களுக்கு கூறுகின்றேன் கனவு காண வேண்டாம்.

சமஷ்டியில் இருந்து வட்டுக்கோட்டை வரை சென்று மீண்டும் திரும்பி 2009ஆம் ஆண்டு வரை இந்த நாட்டு இளைஞர்கள் இரத்தம் சிந்திய, யுத்தமொன்றையா மீண்டும் கேட்கின்றீர்கள்?

அவ்வாறெனின் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இரா.சம்பந்தனும் அந்த சந்திப்பில் இருந்தார். அவர் சரத் பொன்சோகாவுடன் சிங்க கொடியை உயர்த்தி யாழ்ப்பாணத்தில் என்ன கூறினார்? ஒற்றையாட்சிக்குள் பௌத்த சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தீர்வுக்கு செல்வோம் என குறிப்பிட்டார்.

அவ்வாறெனில் இன்று வந்து பேச்சு நடந்துகொண்டிருக்கும் போது அவர் எவ்வாறு இவ்வாறு கூறுவார். பேச்சுக்களின் போது குறைந்த பட்ச தகுதி என்ன? பேச்சு தொடர்பான ஒழுக்கம். அந்த ஒழுக்கத்தை மீறி, வெளியே சென்று ஊடகங்களுக்கு சமஷ்டியை பெறாமல் நாம் முடிவுறுத்த மாட்டோம் என கூறுகின்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6978fa83d48ed
செய்திகள்உலகம்

சீனா – ஜப்பான் இடையே விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு: 49 வழித்தடங்களில் சேவைகள் ரத்து; பயணிகளுக்குக் கட்டணத்தை மீள வழங்கத் தீர்மானம்!

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பெப்ரவரி...

1769561293 Sri Lanka former President Ranil Wickremesinghe Colombo Court 6
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பொதுச் சொத்து முறைகேடு வழக்கு: இன்று மீண்டும் நீதிமன்றில் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று...

GettyImages 2220430732
உலகம்செய்திகள்

அமெரிக்கா – கனடா இடையே போர் விமானப் போர்: F-35-ஐ வாங்கத் தவறினால் வான்வெளியை ஆக்கிரமிப்போம்– அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை!

கனடா தனது வான் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யத்...

26 69753e82ece93
உலகம்செய்திகள்

மதுரோ கைது: Discombobulator என்ற ரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீதான தாக்குதலில், அமெரிக்கப் படைகள் ‘Discombobulator’ என்ற மர்மமான ரகசிய...