11 20
அரசியல்இலங்கை

ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர் ஜெயசூர்யா

Share

ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர் ஜெயசூர்யா

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய (Jayantha Jayasuriya) சட்டத்துறையில் 41 வருட சேவையை நிறைவு செய்து இம்மாதம் 30ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.

ஜயந்த ஜயசூரிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில், அவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது நாட்டின் சட்டமா அதிபராக பணியாற்றினார். ஜயந்த ஜயசூரிய 1983 ஆம் ஆண்டு அரசாங்க சட்டத்தரணியாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்துகொண்டார்.

ஓய்வுபெறவுள்ள பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை கௌரவிக்கும் சம்பிரதாய ரீதியிலான விசேட உச்ச நீதிமன்ற அமர்வு எதிர்வரும் 30ஆம் திகதி உச்ச நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

அவர் ஓய்வு பெற்ற பின்னர், பதில் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ(Murdu Fernando) புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படவுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் கைதான 5 இலங்கையர்கள் 30 நாட்கள் தடுப்புக் காவலில்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

9867DD57 36F5 4D0B B0C9 6373354B6CAA
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராயும் குழு: பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிப்பு!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA) இரத்து செய்வது தொடர்பான பரிந்துரைகள்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...