11 20
அரசியல்இலங்கை

ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர் ஜெயசூர்யா

Share

ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர் ஜெயசூர்யா

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய (Jayantha Jayasuriya) சட்டத்துறையில் 41 வருட சேவையை நிறைவு செய்து இம்மாதம் 30ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.

ஜயந்த ஜயசூரிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில், அவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது நாட்டின் சட்டமா அதிபராக பணியாற்றினார். ஜயந்த ஜயசூரிய 1983 ஆம் ஆண்டு அரசாங்க சட்டத்தரணியாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்துகொண்டார்.

ஓய்வுபெறவுள்ள பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை கௌரவிக்கும் சம்பிரதாய ரீதியிலான விசேட உச்ச நீதிமன்ற அமர்வு எதிர்வரும் 30ஆம் திகதி உச்ச நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

அவர் ஓய்வு பெற்ற பின்னர், பதில் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ(Murdu Fernando) புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படவுள்ளார்.

Share
தொடர்புடையது
18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...

17 3
இலங்கைசெய்திகள்

மோசடி வழக்கு: பிரதியமைச்சர் – மாநகர முதல்வரிடம் பெறப்படவுள்ள வாக்குமூலம்

மோசடி வழக்கு தொடர்பாக, தொழில்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடுவெல...

15 2
இலங்கைசெய்திகள்

தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டால் வவுனியா வடக்கு தேசிய மக்கள் சக்தியிடம் பறி போகும் அபாயம்

தமிழரசுக் கட்சியின்(ITAK) செயற்பாட்டால் வவுனியா வடக்கு பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியிடம் பறிபோகும் அபாய...

14 2
இலங்கைசெய்திகள்

செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு கோரும் சாணக்கியன்

செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் நாளைய தினம் மட்டக்களப்பில் மாபெரும்...