8 9
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியை பெரும் அவமானத்திற்கு உள்ளாக்கியவர் தொடர்பில் பிரதியமைச்சர் தகவல்

Share

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவை தங்கால்லை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்ட நிலையில், அவர் செல்லாமல் ஒளிந்துதிரிவதாக பிரதியமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இதன்போது தொடர்ந்து பேசிய அவர்,

புவக்தண்டாவே சனாவின் வீட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உணவு உட்கொண்டார் என்று ஊடக மாநாட்டில் தெரிவித்தவர் அது தொடர்பான விபரங்களை பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்காமல் ஒளிந்துள்ளார்.

எல்லாம் அப்பட்டமான பொய்கள். சிலர் தான் ஜே.வி.பியில் இருந்ததாக பழைய கதைகளை சொல்லி திரிகின்றனர். அவர்களே ஜே.வி.பியை பெரும் அவமானத்திற்கு உள்ளாக்கியவர்கள்.

இன்னொருவர் தனது ஓய்வூதியம் இல்லாமல் போகும் என்று இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ஜே.வி.பியின் சட்டக்குழுவில் பதவி வகித்ததாக சொல்கின்றார். ஆனால் அது தொடர்பான ஆவணங்களை காண்பிக்குமாறு கோரியதும் வாயடைத்து போயுள்ளார். இவ்வாறானவர்கள் வானம் பிளக்கும் பொய்களையே கூறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...