8 9
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியை பெரும் அவமானத்திற்கு உள்ளாக்கியவர் தொடர்பில் பிரதியமைச்சர் தகவல்

Share

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவை தங்கால்லை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்ட நிலையில், அவர் செல்லாமல் ஒளிந்துதிரிவதாக பிரதியமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இதன்போது தொடர்ந்து பேசிய அவர்,

புவக்தண்டாவே சனாவின் வீட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உணவு உட்கொண்டார் என்று ஊடக மாநாட்டில் தெரிவித்தவர் அது தொடர்பான விபரங்களை பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்காமல் ஒளிந்துள்ளார்.

எல்லாம் அப்பட்டமான பொய்கள். சிலர் தான் ஜே.வி.பியில் இருந்ததாக பழைய கதைகளை சொல்லி திரிகின்றனர். அவர்களே ஜே.வி.பியை பெரும் அவமானத்திற்கு உள்ளாக்கியவர்கள்.

இன்னொருவர் தனது ஓய்வூதியம் இல்லாமல் போகும் என்று இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ஜே.வி.பியின் சட்டக்குழுவில் பதவி வகித்ததாக சொல்கின்றார். ஆனால் அது தொடர்பான ஆவணங்களை காண்பிக்குமாறு கோரியதும் வாயடைத்து போயுள்ளார். இவ்வாறானவர்கள் வானம் பிளக்கும் பொய்களையே கூறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...