8
இலங்கைசெய்திகள்

சுனில் ஹந்துன்னெத்திக்கு சிகிச்சையளிக்க தயார்! அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

Share

அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி நோயொன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சையளிக்க ஒரு மருத்துவர் என்ற ரீதியில் தான் தயாராக இருப்பதாகவும் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சமையலறையில் கரப்பான் பூச்சிகள் , எலிகள் நடமாட்டம் இருப்பதாக தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை நியமிக்கும் செயற்பாடொன்றை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி முன்னின்று மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் பிக் குச்சன் ஒருவர் அடுத்தவர்கள் எதைக் கேட்டாலும் உனக்கு பாணா என்று கேட்பதாகவும் அவ்வாறு தொடர்ச்சியாக கேட்பதன் அர்த்தம் அவர் ஏதோவொரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதாகும் என்றும் அர்ச்சுனா ராமநாதன் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவ்வாறான நிலையில், சுனில் ஹந்துன்னெத்திக்கு சிகிச்சையளிக்க ஒரு மருத்துவர் என்ற ரீதியில் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடம் இருந்து அரசி, வாழைக்குலை, தேங்காய்களை அன்பளிப்பாக பெற்று வாழ்ந்தவர்கள் தற்போது கோடீஸ்வரர்களாகி இருப்பதாகவும் , அவர்களுக்கு தங்களிடமிருந்த அரிசி, தேங்காய் உள்ளிட்டவற்றை அள்ளிக் கொடுத்த பொதுமக்கள் தற்போதைக்கு பஞ்சப் பரதேசிகளாக ஆகியிருப்பதாகவும் அர்ச்சுனா ராமநாதன் தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.

தனது தகப்பனார் யாழ்ப்பாணத்தின் பூர்வீக கோடீஸ்வரர் என்பதன் காரணமாக தன்னிடம் 15 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாகவும், அவற்றில் ஒரு பகுதி தான் மருத்துவத்துறை மூலம் உழைத்துக் கொண்டதாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...