Untitled 1 62 scaled
இலங்கைசெய்திகள்

வாய் திறக்க மறுக்கும் டக்ளஸ்!! சுமந்திரன் குற்றச்சாட்டு

Share

வடக்கின் எதிர்கால நீர் வளத்துக்கு பொருத்தமற்ற அபிவிருத்தித் திட்டமான நயினாமடு சீனித் தொழிற்சாலையை தமிழ் அரசுக் கட்சி எதிர்க்கும் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட இவ்வளவு பெரிய நிலம் ஒதுக்கப்படுவது குறித்து வாய் திறக்கவில்லை” என குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், சீனித் தொழிற்சாலைக்கான நில விநியோகம் தொடர்பிலே ஜனாதிபதியை சில தமிழ் தரப்புக்கள் தனியாகச் சந்தித்தன என்று பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.

மேலும், இந்தச் சீனி தொழிற்சாலைப் பிரதிநிதிகள், தேசிய முதலீட்டுச் சபையின் பிரதிநிதிகள் மற்றும் வவுனியா மாவட்ட அரச அதிபர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மே -18 அன்று சூம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் ரெலோவின் பேச்சளார் கலந்துகொண்டார் எனவும் குறித்த பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியாகிய போதும் அந்தக் கட்சியின் தலைவர்கள் உள்ளூரில் வாயைத் திறக்கவில்லை.

இந்தத் தொழிற்சாலைக்கு நிலம் வழங்கும் தீர்மானம் மேற்கொண்ட அதே அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட இவ்வளவு பெரிய நிலம் ஒரு தொழிற்சாலைக்காக ஒதுக்கப்படுவது குறித்து வாய் திறக்கவில்லை.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...