Untitled 1 62 scaled
இலங்கைசெய்திகள்

வாய் திறக்க மறுக்கும் டக்ளஸ்!! சுமந்திரன் குற்றச்சாட்டு

Share

வடக்கின் எதிர்கால நீர் வளத்துக்கு பொருத்தமற்ற அபிவிருத்தித் திட்டமான நயினாமடு சீனித் தொழிற்சாலையை தமிழ் அரசுக் கட்சி எதிர்க்கும் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட இவ்வளவு பெரிய நிலம் ஒதுக்கப்படுவது குறித்து வாய் திறக்கவில்லை” என குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், சீனித் தொழிற்சாலைக்கான நில விநியோகம் தொடர்பிலே ஜனாதிபதியை சில தமிழ் தரப்புக்கள் தனியாகச் சந்தித்தன என்று பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.

மேலும், இந்தச் சீனி தொழிற்சாலைப் பிரதிநிதிகள், தேசிய முதலீட்டுச் சபையின் பிரதிநிதிகள் மற்றும் வவுனியா மாவட்ட அரச அதிபர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மே -18 அன்று சூம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் ரெலோவின் பேச்சளார் கலந்துகொண்டார் எனவும் குறித்த பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியாகிய போதும் அந்தக் கட்சியின் தலைவர்கள் உள்ளூரில் வாயைத் திறக்கவில்லை.

இந்தத் தொழிற்சாலைக்கு நிலம் வழங்கும் தீர்மானம் மேற்கொண்ட அதே அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட இவ்வளவு பெரிய நிலம் ஒரு தொழிற்சாலைக்காக ஒதுக்கப்படுவது குறித்து வாய் திறக்கவில்லை.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...