24 66265a64cc5f8
இலங்கைசெய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவெடுப்போம்! சுமந்திரன்

Share

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவெடுப்போம்! சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் ஏற்படும் சாதக – பாதகங்கள் தொடர்பில் அனைத்தையும் ஆராய்ந்து ஒரு சரியான முடிவை எடுப்போம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (Sumanthiran) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியினுடைய மத்திய குழுவில் கூடித் தீர்மானம் எடுப்போம். நாளை (23.04.2024) செவ்வாய்க்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடவுள்ளது.

அதன்போது, பொது வேட்பாளர் தொடர்பில் ஆரம்பகட்ட பேச்சு நடைபெறும். பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் ஏற்படும் சாதக – பாதகங்கள் தொடர்பில் அனைத்தையும் ஆராய்ந்து ஒரு சரியான முடிவை எடுப்போம்.

தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிப்போம்” என்றார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...