இலங்கைசெய்திகள்

சீனி மோசடி குறித்து மீண்டும் விசாரணைகள் ஆரம்பம்

20 15
Share

சீனி மோசடி குறித்து மீண்டும் விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய சீனி மோசடி தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கோட்டாபயவின் அப்போதைய செயலாளர்களது அலைபேசி மற்றும் நிலையான தொலைபேசி இலக்கங்களின் வழியான தொடர்பாடல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சீனி வரி மோசடியினால் அரசாங்கத்திற்கு 14 பில்லியன் ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பிலான கணக்காய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஒரு இறக்குமதியாளருக்கு சாதக நிலை ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக பெருந்தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் மீண்டும் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...