இலங்கைசெய்திகள்

போராட்டத்திற்கு தயாராகும் அரச ஊழியர்கள்

rtjy 340 scaled
Share

சம்பள உயர்வு கோரி நாடு முழுவதும் அரச ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(30.10.2023) நண்பகல் 12 மணியளவில் இடம்பெறும் என அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சம்பள அதிகரிப்பை கோரியே நாடளாவிய ரீதியில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என அந்த சங்கங்களின் இணைப்பாளர் சந்தன சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவை மற்றும் மாகாண அரச சேவை என பல சங்கங்களின் அதிகாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அடுத்த வாரத்துக்குள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...