1 19
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தலின் பின் அநுரவுடன் இணையப்போகும் வடக்கின் முக்கிய அரசியல் தலைவர்

Share

பொதுத் தேர்தலின் பின் அநுரவுடன் இணையப்போகும் வடக்கின் முக்கிய அரசியல் தலைவர்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படத் தயார் என வடக்கின் அரசியல் தலைவர் ஒருவர் தன்னிடம் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்தார்.

தலவத்துகொடையில் இன்று (13) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“பலமான அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான இடைக்கால கட்டத்தில் நாம் நகர்கிறோம். சில தீர்மானங்களுக்கும் சில நடவடிக்கைகளுக்கும் வலுவான அரசியல் சக்தி தேவை.

2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) நாடாளுமன்றத்தில் 2/3 அதிகாரத்தைப் பெற்றார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். 2020ல் கோட்டாபய ராஜபக்சவிற்கு(gotabaya rajapaksa) 2/3 அதிகாரம் கிடைத்தது. ஆனால் இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் 2/3 அதிகாரம் பறிபோனது.ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது.

வடக்கின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை சந்தித்தோம். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய மக்கள் படையுடன் இணைந்து செயற்பட தமது குழு விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும் அவர்கள் எம்முடன் இணைந்து செயற்படாவிட்டால் வடபகுதி மக்கள் எம்முடன் இணைந்து செயற்படத் தயார் எனவும் தெரிவித்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
23858849 newproject 2025 12 28t112541304
செய்திகள்உலகம்

இனி வீட்டு வேலைகளுக்கு ‘ஹுமாயுனோய்டு’ ரோபோக்கள்: சிலிக்கான் வேலியில் தீவிரமடையும் தயாரிப்புப் பணிகள்!

வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்வதற்கான மனித ரொபோக்களை தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவின் சிலிக்கன் வெலி தொழில்நுட்ப...

24632725 china
செய்திகள்உலகம்

சீனாவில் களைகட்டிய உலக இந்தி தினம்: ஷாங்காய் இந்தியத் தூதரகத்தில் மாணவர்கள் உற்சாகப் பங்கேற்பு!

உலக இந்தி தினத்தை முன்னிட்டு சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விசேட கொண்டாட்டங்கள்...

kalvi L 260112092401000000
செய்திகள்உலகம்

தட்சசீலத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான குஷான கால நாணயங்கள் கண்டெடுப்பு: உலகளாவிய வணிக மையம் என்பது உறுதி!

பாகிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க தட்சசீலம் (Taxila) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 2,000 ஆண்டுகள் பழமையான குஷானப்...

26 69631f5fb34d5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தீவிரமடையும் வைரஸ் காய்ச்சல்: கொழும்பில் சிக்குன்குனியா; நாடு முழுவதும் டெங்கு அச்சம்!

இலங்கையில் தற்போது பல்வேறு வகையான வைரஸ் நோய்கள் வேகமாகப் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின்...