அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு
இலங்கைசெய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு

Share

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் பதவியேற்பு விழாக்கள் எதனையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவியேற்பு விழாக்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 திகதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் 134 வாக்குகளைப்பெற்று இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ளது.

இந்நிலையில், எரிவாயு வரிசைகள், எரிபொருள் வரிசைகள் என கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாடு தற்போது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியால் வழமைக்கு திரும்பியுள்ளதாக பதவியேற்பு விழாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசாங்கத்துடன் நட்புறவு கொண்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, பொது மற்றும் தனியார் பணத்தை செலவிட்டு பதவியேற்பு விழாக்களை நடத்தக்கூடாது என கடுமையாக உத்தரவிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...