இலங்கைசெய்திகள்

விமான நிலையங்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள்

tamilnaadi 42 scaled
Share

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட நாட்டிலுள்ள சகல விமான நிலையங்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன்,சகல விமான நிலையங்களினதும் பராமரிப்பு நடவடிக்கைகளை விரிவு படுத்துவதற்கும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

புதிதாக பயிற்சிகளை முடித்துக் கொண்டுள்ள 135 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் நிகழ்வு இரத்மலானை விமான நிலைய வளாகத்தில் இடம் பெற்றது.

இதில்,உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது விமான நிலையங்களில் பணிபுரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 1120 என்றும் தெரிவித்த அமைச்சர், அந்த எண்ணிக்கையை 1325 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் எந்த ஒரு பொருளோ அல்லது போதைப் பொருள்களையோ சட்டவிரோதமாக எடுத்து வர முடியாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே வேளை, பயிற்சிகளை முடித்துக் கொண்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் தமது கடமைகளை முறையாக முன்னெடுப்பர் என, தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....